Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Sunday, January 12, 2014

சோளப் பணியாரம் (இனிப்பு மற்றும் காரம்)

சோளப் பணியாரம் (இனிப்பு மற்றும் காரம்)
இடம்:காரம், வலம்:இனிப்பு
தேவையானப் பொருட்கள்: (4 தட்டுக்களுக்கு)
மாவு அரைக்க:

  • நாட்டு சோளம் – 1 கப் (200 கிராம்)
  • தோல் உளுந்து – 3 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • இந்துப்பு – 1 சிட்டிகை
  • தண்ணீர் – 3/4 முதல் 1 குவளை வரை



இனிப்பு பணியாரத்திற்கு மாவுடன் கலக்க:

  • வெல்லம் – 3/4 கப்
  • தண்ணீர் – 3/4 கப்
  • ஏலக்காய் – 4 துண்டுகள்

மாவு அரைக்கும் முறை:
  • சோளத்தை 5 மணிநேரம் வரை ஊற வைக்கவும்.
  • தோல் உளுந்து மற்றும் வெந்தயம், இவை இரண்டையும் 5 மணிநேரம் வரை ஊற வைக்கவும். 
  • பின் ஒன்றிரண்டு முறை நீரில் அலசி விட்டு, ஆட்டுக்கல்லில் (கிரைண்டர்) முதலில் உளுந்து, வெந்தயக் கலவையை அரைக்கவும். சிறிதளவு நீர் ஊற்றவும். அது நன்றாக பொங்கி வந்த பிறகு, மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். 
  • பிறகு சோளத்தையும் அதேபோல் சிறிது நீர் ஊற்றி அரைக்கவும். இறுதியில் உளுந்து மாவையும் ஒருமுறை சோள மாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 
  • இந்த மாவில் இந்துப்பை கலந்து 8 மணிநேரம் புளிக்க விடவும். 

இனிப்பு பணியாரம் செய்முறை;
  • பணியாரம் ஊற்றுவதற்கு முன்னர், வெல்லப்பாகு சேர்க்க வேண்டும். 
  • ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை தூளாக்கி போட்டு, அதில் 1/4 டம்ளர் நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். 
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3 நிமிடம் வரை கொதிக்க விடவும். 
  • பிறகு அதனை வடிகட்டி பணியார மாவில் ஊற்றி, அதில் சிறிது ஏலக்காய் பொடி போட்டு நன்றாக கலக்கவும். 
  • இறுதியில் பணியார அச்சு பாத்திரத்தில் மாவை சிறிது சிறிதாக ஊற்றி, இருபுறமும் நன்றாக வெந்த பிறகு, பணியாரத்தை எடுத்து வேறு தட்டில் வைக்கவும். 
  • சூடு சற்று குறைந்த பின்னர் சாப்பிடவும்.

காரப்பணியாரம் செய்முறை:
  • பெரிய வெங்காயம் -  1 நறுக்கியது
  • கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
  • கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
  • மிளகு - 1/2 தேக்கரண்டி
  • நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
  • கறிவேப்பிலை – விருப்பமான அளவு
செய்முறை:
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணை ஊற்றவும். 
  • எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு போடவும். பின் கடலைப்பருப்பு போட்டு வதக்கி, பொன்னிறமாக ஆன பிறகு வெங்காயம் போட்டு வதக்கவும். மிளகை பொடித்து போடவும். 
  • இறுதியில் கறிவேப்பிலை போட்டு அடுப்பை அணைக்கவும். 
  • இந்தக் கலவையை பணியார மாவில் போட்டு நன்றாக கலக்கி, பணியார அச்சில் ஊற்றி, வேக வைக்கவும். 

குறிப்ப:
  1. சோளத்திற்கு பதிலாக, வரகு, சாமை, பனிவரகு, திணை ஆகிய சிறு தானியங்களையும், மாப்பிள்ளை சம்பா அரிசியையும் பணியாரம் செய்ய பயன்படுத்தலாம்.
  2. பணியார மாவு அரைப்பதற்கு, உங்களுக்குத் தெரிந்த வழக்கமான முறையையும் பின்பற்றலாம். ஆனால் உளுந்தின் அளவை மட்டும் எப்பொழுதும் குறைத்துப் பயன்படுத்தவும்.

No comments :

Post a Comment